பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமா நடைபெற்றது. இந்த நிகழ்வில், பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியவாரு அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய நிலையில், அலகு குத்தி அந்தரத்தில் தொங்கிய பக்தர்களை கண்டு பார்வையாளர்கள் பிரமிப்பு.


கோவை: பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கிவரும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 27ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.



அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தங்களது உடலை வருத்தி அலகு குத்தி கோவிலுக்கு வரும் நிகழ்வு நடைபெற்றது.



பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு திருவள்ளுவர் திடலில் பக்தர்கள் தங்களது உடலை வருத்தி அலகு குத்தி பறவை காவடி, வேல் காவடி, மயில் காவடி,போன்ற விதவிதமான அலங்கார வளைவுகளில் அமர்ந்தும், அந்தரத்தில் தொங்கிய படியும், கிரேன் வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட சாட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



திருவள்ளுவர் திடலில் தொடங்கிய இந்த ஊர்வலமானது வெங்கட்ரமணன் வீதி, உடுமலை சாலை கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உறவினர்கள் நண்பர்களுடன் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதில், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அந்தரத்தில் தொங்கிவாரு விதவிதமாக அலகு குத்திக் கொண்டு ஊர்வலமாக வந்ததைக் கண்டு பொதுமக்கள் பிரம்மிப்படைந்தனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...