இடமாறுதலாகி செல்லும் வால்பாறை காவல் ஆய்வாளருக்கு பிரிவு உபச்சார விழா!

வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் இடமாறுதலாகி, வேறு இடத்திற்கு செல்லவுள்ள நிலையில், அவருக்கு காவல்நிலையத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த விழாவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கோவை: வால்பாறை காவல் நிலைய ஆய்வாளருக்கு அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் இணைந்து பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கற்பகம். இவர், சுமார் 1 வருடம் 8 மாதங்கள் வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.



இந்நிலையில், தற்போது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு இடம் மாறுதல் நிமித்தம் செல்வதால் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

வால்பாறை டி.எஸ்.பி கீர்த்தி வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரம். வார்டு உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



காவல் ஆய்வாளர் கற்பகம் வால்பாறை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக சிறு பள்ளி கூடத்தில் இருந்து கல்லூரி வரை பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் கஞ்சா தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.



மேலும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம் மனநிலை ஆலோசனையும் வழங்கி உள்ளார். இதனால் வால்பாறை பகுதியில் தற்கொலை போன்ற செயல்பாடுகளை தவிர்க்கும் வண்ணம் செயல்பட்டு வந்துள்ளார்.

மேலும் சுமார் 91 பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகள் என்று பல்வேறு வகையான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார், இதனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடைப்பட்ட கருத்து வேறுபாடுகளை தவிர்த்து குழந்தைகள் நன்கு படிக்கும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளார்.



தற்பொழுது இவர் இடமாற்றமாகி செல்வதால் வால்பாறை காவல் நிலைய அதிகாரிகளும் பொதுமக்களும் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...