உலக அமைதி, வன்முறை எதிர்ப்பை வலியுறுத்தி ஜிட்டோ பெண்கள் அமைப்பினர் அஹிம்சா மாரத்தான்

உலக அமைதி, வன்முறை எதிர்ப்பை வலியுறுத்தி கோவையில் ஜிட்டோ பெண்கள் அமைப்பு சார்பில் 3 பிரிவுகளில் நடைபெற்ற அஹிம்சா மாரத்தான் போட்டியில் ராணுவம், காவல்துறை, ஆண்கள், பெண்கள் என ஜாதி, மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.


கோவை: உலக அமைதி, வன்முறை எதிர்ப்பை வலியுறுத்தி கோவையில் ஜிட்டோ பெண்கள் அமைப்பு சார்பில் அஹிம்சா மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.

உலகம் முழுவதும் 22 நாடுகளிலும், இந்தியாவில் 65க்கும் மேற்பட்ட நகரங்களிலும் கின்னஸ் உலக சாதனை நிகழ்வாக அஹிம்சா மராத்தான் நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகவும், அமைதியை வலியுறுத்தியும் அஹிம்சா மாரத்தான் நடைபெற்றது.



முழுவதும் பெண்கள் ஒருங்கிணைத்த இந்த மாரத்தானை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மூன்று, ஐந்து, பத்து கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், இந்திய தரைப்படை, கப்பல் படை, விமானப் படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த ராணுவத்தினர், காவல் துறையினர் உட்பட வயது வித்தியாசம், ஜாதி, மதம் ஆண் பெண் என்று எந்தவித வித்தியாசமும் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

கோவையில் நடைபெற்ற ஜிட்டோ அகிம்சா மாரத்தான் போட்டியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...