தாராபுரம் உப்பாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நாளை தண்ணீர் திறப்பு!

தாராபுரம் அருகேயுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும், அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் தண்ணீர் வேண்டி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று உப்பாறு அணையில் இருந்து நாளை முதல் வரும் 10ஆம் தேதி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணையில் இருந்து நாளை முதல் வரும் 10ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணை மூலம் சுமார் 6,060 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது உப்பாறு அணையில் இருந்து நாளை விவசாய பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்த தண்ணீர் திறப்பினால் சகுனிபாளையம், கெத்தல்ரேவ், வரப்பாளையம், நஞ்சிம்பாளையம், ஆலம்பாளையம் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும் தற்போது பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் தண்ணீர் வேண்டியும் விவசாயிகள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு உடனடியாக நாளை உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வலது மற்றும் இடது கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை இரண்டாம் தேதி முதல் வருகின்ற பத்தாம் தேதி வரை மொத்தம் 130.99 மில்லியன் கன அடி தண்ணீர் மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து உப்பாறு அணையில் நாளை தண்ணீர் திறந்து விட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...