திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் இருவர் கைது!

திருப்பூரில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் நண்பரை தாக்குவதை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அருகே ஆட்டோ ஓட்டுனரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே இவரது நண்பர் சக்திவேலுக்கும் அவரது, நண்பர்களான மாரியப்பன் மற்றும் முனியசாமி இருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதனிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன் சக்திவேலிடம், மாரியப்பன், முனியசாமி இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து மணிகண்டன் மூன்று பேரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் மற்றும் முனியசாமி ஆகிய இருவரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் மற்றும் முனியசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனை தாக்க முயன்றதை தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...