உடுமலை அருகே கிடப்பில் போடப்பட்ட தரைமட்ட பாலம் கட்டும் பணி - வாகன ஓட்டிகள் அவதி!

உடுமலை அடுத்த கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் பணிகளால் தரைமட்ட பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாலும், அங்குள்ள பெரிய அளவிலான பள்ளத்தில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விழுந்து விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தரைமட்ட பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் அருகே கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் பணிகளால், அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. இதனால் பொள்ளாச்சி- பழனி சாலையில் இருந்து இணைப்பு சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் கழிவுநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தரைமட்ட பாலத்தை புதுப்பித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு பணி தொடர்ந்து நடைபெறாததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது, நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு செல்வதற்கு இந்த சாலை பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. இதில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்ததை யொட்டி புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன் பின்பு பணிகள் நடைபெறவில்லை.

இதன் காரணமாக ஆண்டாள் சீனிவாசன் லே அவுட், பெரியார் நகர், பழனியாண்டவர் நகர், ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு வேறு சாலை வழியாக சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து கால்வாய் ஓரத்தில் வசித்து வரும் பொதுமக்களுக்கு உடல் நலக்குறைபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.

பொள்ளாச்சி - பழனி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியவாறு பெரிய அளவில் குழி வெட்டப்பட்டு உள்ளதால் அந்தப் பகுதியை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எனவே கழுத்தறுத்தான் பள்ளம் அருகே கிடப்பில் போடப்பட்ட தரைமட்ட பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...