நகராட்சி கடைகளில் அதிக வாடகை வசூல் - வால்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமாக 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளுக்கு அதிகப்படியான வாடகை வசூல் செய்வதால், கடைக்காரர்கள் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இதை கண்டித்து வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் கடை வாடகை அதிகமாக உள்ளதால் வாடகை செலுத்த முடியாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன்பு வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.

அதில்,ஒரு சில கடைகள் வாடகை பணத்தை செலுத்தி விட்டு கடையை மீண்டும் நடத்தி வருகின்றனர். மீதம் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்து, தற்போதுவரை அவை திறக்கப்படாமல் உள்ளன.

தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் கடைகளுக்கு இரண்டு மாதம் வாடகை செலுத்தாவிட்டல், நகராட்சி நிர்வாகம் உடனடியாக கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கடைகளுக்கு அதிகப்படியான வாடகை வசூல் செய்வதால், கடைக்காரர்கள் கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.



மேலும், அகற்றப்பட்ட சாலையோர கடைகளுக்கு பதிலாக, நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக சீல் வைக்கப்பட்ட கடைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கட்சியின் செயலாளர் பரமசிவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, சாலையோரம் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும், நகராட்சி கடைகளுக்குள் மழைக்காலங்களில் தண்ணீர் வருவதை சரி செய்து தர வேண்டும், கடை வாடகையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...