கோவையில் மதுபோதையில் தகராறு - கல்லூரி மாணவர் குத்திக்கொலை

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மதுபோதையில் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த தகராறில், கத்தியால் குத்தப்பட்டு 21 வயது இளைஞர் புவனேஷ்குமார் கொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது23). ஆட்டோ ஓட்டுநரான இவரது குடும்பத்தை பற்றி அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நந்தகுமார் (வயது22) என்பவர் அபாசமாக பேசியதாக தெரிகிறது. இது குறித்து பாலாஜிக்கும், நந்தகுமாரும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் பகுதியில் உள்ள கோவில் அருகே பாலாஜி மற்றும் அவரது நண்பர்களும், நந்தகுமார் நண்பர்கள் குழுவினரும், மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மீண்டும் பழைய பிரச்சனையை வைத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் இரண்டு குழுவினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த பாலாஜியின் நண்பரான 17 சிறுவர் ஒருவர், கல்லூரி மாணவரான புவனேஷ்குமார் (வயது21), மற்றும் சந்தோஸ் , சஞ்சய் ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில், நிலை தடுமாறி விழுந்த புவனேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த சந்தோஷை கோவை அரசு மருத்துவமனைக்கும், சஞ்சய் என்ற இளைஞரை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார், புவனேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக இரண்டு சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...