கொரோனா முன்னெச்சரிக்கை - கோவை அரசு மருத்துவமனையில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள், மருத்துவர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்துவருகிறது. நேற்றைய (மார்ச்.31) நிலவரப்படி கோவையில் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இதுவரை 108 பேருக்கு தொற்றுபாதித்துள்ளது.

சென்னை 38 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுவரை சென்னையில் 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நேற்றுவரை தமிழகத்தில் 777 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.



இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரும் இன்று முதல் முகக்கசவம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக சிம்பிளிசிட்டியிடம் பேசிய மருத்துவமனையின் இயக்குநர் நிர்மலா, மருத்துவமனை என்பது கொரோனா உள்ளிட்ட அனைத்து வகையான தொற்றுகளுக்குமான மையமாக உள்ளது. எனவே, நோய் தொற்று குறித்து முன்னெச்சரிக்கையை ஏற்படுத்தவும், நோயிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த மருத்துவமனையில் இன்று 2 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்றுப்பரவலைத் தடுக்கவும், குறைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...