உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் - ராகுல்காந்தியின் பதவி பறிப்புக்கு கண்டனம்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பைக் கண்டித்து உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்த மத்திய மோடி அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அநீதியானது என்றும், அதனை காரணம்காட்டி ராகுல்காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கையை கண்டித்தும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும், நலவாரியம் மாவட்ட செயலாளருமான குணசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர் அப்பாஸ், தமிழர் பண்பாட்டு பேரவை இணைத்தலைவர் பால் நாராயணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜு,

மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன், உடுமலை நகரத் தலைவர் கோ.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...