மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது: கோவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கவில்லை எனவும், மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது எனவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை ஈஷா யோக மையத்திற்கு நாளை பிரமர் நரேந்திர மோடி வருகிறார். அவரது வருகயம்யையொட்டி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அதிகாலை ரயில் மூலமாக கோவை வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக செய்த தனது தரப்பு தவறுகளை மறைக்கவே நேற்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளது. திமுக, அதிமுக என்ற இரண்டு கழகங்களினாலும் தமிழகத்திற்கு எந்த நன்மையும் வராது. எந்த வழியை கடைபிடித்தாலும் திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை வரப்போவதில்லை. இந்த இரு கழகங்களையும் ஒழிக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர். முதல்வர் தனது பொறுப்பை காப்பாற்ற செலுத்தும் கவனத்தை சுகாதாரம், விவசாயத்தின் மீதும் செலுத்த வேண்டும். வறட்சி, வெள்ளம், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு தான் முறைப்படி கேட்டு பெற வேண்டும்.

பல மாதங்களாக தமிழக அரசு செயல்படாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கவில்லை. இத்திட்டம், முந்தைய காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டம். மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது  ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க தற்போது சில எதிர்ப்புகள் வந்தாலும்  அந்த பிரச்சணைக்கு நீதிமன்ற வழக்கு மூலமாக தீர்வு காண வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் போது மட்டும் பிரச்சணைகளுக்கு உயிரோட்டம் தருவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...