கோவையில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புக்கு சென்ற மாணவர்கள் மீது தாக்குதல் - இந்து அமைப்புகள் திரண்டதால் பரபரப்பு!

கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பிற்கு சென்ற சிறுவர்களை கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியதாக கூறி இந்து முன்னணி, பாஜகவினர் வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல்நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற வகுப்பிற்கு சென்ற சிறுவர்கள் தாக்கப்பட்டதாக கூறி இந்து அமைப்பினர் காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ம.ந.க. வீதியில் இந்து முன்னணி, பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் மகன்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பில் பங்கேற்க சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரமுகர், அந்த சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது.



இதையறிந்த இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல் நிலையம் முன்பு திரண்டு, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.



இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்து அமைப்பு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...