கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பிற்கு சென்ற சிறுவர்களை கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியதாக கூறி இந்து முன்னணி, பாஜகவினர் வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல்நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற வகுப்பிற்கு சென்ற சிறுவர்கள் தாக்கப்பட்டதாக கூறி இந்து அமைப்பினர் காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ம.ந.க. வீதியில் இந்து முன்னணி, பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் மகன்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பில் பங்கேற்க சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரமுகர், அந்த சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையறிந்த இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல் நிலையம் முன்பு திரண்டு, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்து அமைப்பு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை ம.ந.க. வீதியில் இந்து முன்னணி, பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் மகன்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பில் பங்கேற்க சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரமுகர், அந்த சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல் நிலையம் முன்பு திரண்டு, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்து அமைப்பு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.