கோவையில் வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை

கோவை நல்லாம்பாளையத்தில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை நல்லாம்பாளையம் சபரி கார்டன் 6வது வீதியில் குடியிருந்து வருபவர் சுரேஷ்குமார். வழக்கறிஞரான இவர், தனது மனைவி மகள் ஆகியோருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மூகாம்பிகா கோவில்களுக்கு சென்றனர்.

அப்போது, வீட்டின் மேல் புறம் குடியிருக்கும் வாட்ச்மேன் செடிகளுக்கு தண்ணீர் மற்றும் இரவு நேரங்களில் பார்த்துக் கொள்ள காம்பவுண்ட் கேட்டின் சாவியை கொடுத்து சென்றதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், வாட்ச்மேன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது முன்புற கிரில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், மேலும் வீட்டின் உள்ளே உள்ள மெயின் கதவு திறந்து கிடப்பதையும் பார்த்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக, உறவினர்களுக்கு தகவல் சொல்லி போலீசாருடன் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு ஒரு சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைகளை தேடி வருகின்றனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...