தாராபுரத்தில் நீதிமன்றங்களைப் பார்வையிட்ட ஆதிதிராவிட நலத்துறை விடுதி மாணவிகள்!

தமிழகத்தில் முதல்முறையாக நீதிமன்ற செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில், தாராபுரத்தில் உள்ள நீதிமன்றங்களை ஆதிதிராவிட நலத்துறை விடுதி மாணவிகள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் தலைவர் சார்பு நீதிபதியான தர்ம பிரபு செய்திருந்தார்.


திருப்பூர்: தமிழகத்தில் இதுவரை சட்டசபை கூட்டத்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சென்று பார்த்து வந்தனர்.தற்போது, தமிழகத்தில் முதல் முறையாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தாராபுரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தங்கும்விடுதியில் உள்ள 10,11,12ம் வகுப்பு மாணவிகள் உயர்கல்வியில் படிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில்,நீதிமன்ற செயல்பாட்டை தெரிந்து கொள்வதற்காக தாராபுரத்தில் உள்ள நீதிமன்றங்களை பார்வையிடஅனுமதி அளிக்கப்பட்டது.



அதன்பேரில் அரசு பள்ளி மாணவிகளின் 27 பேர் மற்றும் 3'வது மாவட்ட நீதிமன்றம் சார்பு நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றில் ஒரு மணி நேரம் அமர்ந்து அதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர்.



மேலும்,நீதிமன்றத்தை நேரில் சென்று பார்வையிட அனுமதி அளித்த வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதியான தர்ம பிரபுவுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.



இது குறித்து மாணவி ஷாலினி கூறுகையில், நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். என்னால் தினமும் பள்ளிக்கு சென்று பயிலாத முடியாத காரணத்தினால் நான் தாராபுரம் ஆதி திராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று பயின்று வருகிறேன்.

தற்போது, பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். இந்த நிலையில், தாராபுரம் நீதிபதி எங்களை தாராபுரம் நீதிமன்ற செயல்பாடுகளை பார்க்க அனுமதி அளித்ததன் பேரில்,எங்கள் விடுதியில் உள்ள மாணவிகள் அனைவரும் நீதிமன்ற செயல்பாடுகளை பார்த்து தெரிந்துகொண்டோம். நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல அரசு கல்லூரியில் சேர்ந்து படித்து உயர்ந்த நிலைக்கு வருவேன், என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...