உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 41 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கல்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அபெக்ஸ் ஸ்கில் டெவலப்மென்ட் கார்பரேசன் லிட் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு 240 மணி நேரம் வேலைவாய்ப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற உடுமலை அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 41 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 41 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு "அபெக்ஸ் ஸ்கில் டெவலப்மென்ட் கார்பரேசன் லிட்" மூலம் கல்லூரி மாணவர்களுக்கு 240 மணி நேரம் வேலைவாய்ப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படிக்கும் 49 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில் 3 தனியார் நிறுவனங்கள் மூலம் 41 பேர் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கான ஊதியத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பணி நியமன ஆணையை நேர்முகத்தேர்வு ஒருங்கிணைப்பாளர் தினேஷ் முன்னிலையில் கல்லூரியின் முதல்வர் கல்யாணி வழங்கினார்.

கல்லூரியின் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல்துறைப் பேராசிரியர் கதிர்வேலு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...