கோவை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.110.90 கோடி மதிப்பில் பன்னடுக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்வேறு சிகிச்சை பிரிவுகளையும் ஆய்வு செய்தார்.
கோவை: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பன்னடுக்கு மருத்துவமனை கட்டிட பணிகள் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் ரூ.110.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
இதில் 250 படுக்கை வசதி, 12 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் நவீன ஆய்வகங்கள் அமையவுள்ளது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மேலும், மழை பெய்யும் போது மருத்துவமனை நுழைவாயிலில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்வேறு சிகிச்சை பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவக்கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதி மற்றும் கல்லூரியின் பின்புறம் உள்ள பகுதிகளில் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாகவும், மருத்துவமனை முதல்வரிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் உட்பட மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பன்னடுக்கு மருத்துவமனை கட்டிட பணிகள் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் ரூ.110.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
இதில் 250 படுக்கை வசதி, 12 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் நவீன ஆய்வகங்கள் அமையவுள்ளது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மேலும், மழை பெய்யும் போது மருத்துவமனை நுழைவாயிலில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்வேறு சிகிச்சை பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவக்கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதி மற்றும் கல்லூரியின் பின்புறம் உள்ள பகுதிகளில் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாகவும், மருத்துவமனை முதல்வரிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் உட்பட மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.