பழனி புதிய மாவட்டத்தில் உடுமலை இணைப்பா? - சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் பரபரப்பு

திண்டுக்கல்லை பிரித்து பழனி தனி மாவட்டமாக உருவாக்கும்பட்சத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையும் பழனியுடன் இணைப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலால் மக்களிடையே பரபரப்பு நிலவிவருகிறது.


திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளது எனவும், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஒட்டன்சத்திரம், பழனி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து பழனியை தலைமை இடமாக வைத்து புதிய மாவட்டம் உருவாக்க அமைச்சர் சக்கரபாணி மற்றும் திமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக முதல்வரை சந்தித்த திமுக நிர்வாகிகள் பழனியை தனி மாவட்டமாக அறிவித்தால், பழனி மலை, திருமூர்த்தி மலை, ஆனைமலை, கொடைக்கானல் ஆகிய மலைகள் அதற்குள் வரும் பழனி முக்கியமான ஆன்மீக நகரம் என்பதால் இந்துக்களின் ஓட்டுக்களை பெற முடியும் என வலியுறுத்தியதாக உடுமலை பகுதியில் உள்ள சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

பழனி மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...