கல்வி உரிமைச்சட்ட இணையதளம் செயலிழப்பு - சேர்க்கை விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல்!

தமிழக அரசின் கல்வி உரிமை சட்ட இணைதளம் செயலிழந்துள்ளதால், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தரமான கல்வியைப் பெறும் வகையில், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.

இத்திட்டத்தில் எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்புக்கான சேர்க்கைகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் சேரும் குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் வரை ஆகும் செலவை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கின்றன.

அந்த வகையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கைக்கான RTE விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக RTE இணையதளம் செயலிழந்துள்ளதாகவும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்ற முடியவில்லை எனவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.



முதல் கட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவேற்ற நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், இணையதளம் செயலிழப்பால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு கால நீட்டிப்பு வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...