கோவை ரத்தினபுரி பகுதியில் தெருவோரம் படுத்திருந்த நாயின் தலையில் குடிபோதையில் இருந்த 17 வயது சிறுவன் கல்லைப் போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதி சுப்பிரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜீவா(வயது63). இவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன் நேற்றிரவு குடிபோதையில் வந்து தெருவோரம் தூங்கி கொண்டிருந்த நாயை சீண்டியதாக தெரிகிறது.
அப்போது, நாய் குலைக்கவே குடிபோதையில் இருந்த அந்தச் சிறுவன் ஆத்திரத்தில் அருகில் கிடந்த கல் ஒன்றை எடுத்து நாயின் தலையில் போட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அந்த நாய் உயிரிழந்தது.
இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அச்சிறுவனை கண்டித்துள்ளனர். மேலும் நாயின் உரிமையாளரான ஜீவா அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி காவல்துறையினர் அச்சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன் நேற்றிரவு குடிபோதையில் வந்து தெருவோரம் தூங்கி கொண்டிருந்த நாயை சீண்டியதாக தெரிகிறது.
அப்போது, நாய் குலைக்கவே குடிபோதையில் இருந்த அந்தச் சிறுவன் ஆத்திரத்தில் அருகில் கிடந்த கல் ஒன்றை எடுத்து நாயின் தலையில் போட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அந்த நாய் உயிரிழந்தது.
இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அச்சிறுவனை கண்டித்துள்ளனர். மேலும் நாயின் உரிமையாளரான ஜீவா அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி காவல்துறையினர் அச்சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.