ஆதியோகி சிலை திறப்பு விழாவில் மோடி பங்கேற்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தினர் கைது.

கோவையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள ஈஷாவின் ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி அருகே மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையினை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 24-ம் தேதியன்று கோவைக்கு வருகை தரவுள்ளார்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இந்த சிலையின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெறும் 100 சதுர அடிக்கு மட்டும் உள்ளூர் பஞ்சாயத்திடம் அனுமதி பெற்றுக்கொண்டு, 4 லட்சம் சதுர அடிக்கு விதிமுறைகளை மீறி ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள சிலை திறப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்வது சரியான முன்னுதாரனமாக இருக்காது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தைச் சேர்ந்த 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...