உடுமலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலியிடங்களை அவுட் சோர்சிங் முறையில் நிரப்புவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருப்பூர்: உடுமலையில் சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிஐடியு சங்கம் கிளைத் தலைவர் பாபு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம், போக்குவரத்து கழகத்தில் வரவு செலவுக்கான இடைவெளி தொகையை அரசே ஏற்க கோரியும், ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு ஓய்வு பெறும் நாளன்றே பிஎஃப் கிராஜுவிட்டி கொடுத்திட வழிவகை செய்யாததைத் கண்டித்தும், காலி பணியிடங்களை அவுட் சோர்சிங் முறையை புகுத்துவதை கண்டித்தும் நடைபெற்றது.
இதில் மண்டல துணைப் பொதுச்செயலாளர் விஸ்வநாதன், கிளை துணை துணைச் செயலாளர் ஜோதி கண்ணன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிஐடியு சங்கம் கிளைத் தலைவர் பாபு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம், போக்குவரத்து கழகத்தில் வரவு செலவுக்கான இடைவெளி தொகையை அரசே ஏற்க கோரியும், ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு ஓய்வு பெறும் நாளன்றே பிஎஃப் கிராஜுவிட்டி கொடுத்திட வழிவகை செய்யாததைத் கண்டித்தும், காலி பணியிடங்களை அவுட் சோர்சிங் முறையை புகுத்துவதை கண்டித்தும் நடைபெற்றது.
இதில் மண்டல துணைப் பொதுச்செயலாளர் விஸ்வநாதன், கிளை துணை துணைச் செயலாளர் ஜோதி கண்ணன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.