மலைபோல் குவிக்கப்பட்டுள்ள டயர்களால் சுகாதாரசீர்கேடு - கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை செல்வபுரம் பை-பாஸ் சாலையில் உள்ள யோக சாஸ்தா குடியிருப்புப் பகுதியில் வாகனங்களின் டயர்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் பை-பாஸ் சாலையில் யோகா சாஸ்தா குடியிருப்புப் பகுதி உள்ளது.

இதன் பின்பகுதியில் உள்ள காலியிடத்தில், சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களின் டயர்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த டயர்களை பற்றவைத்து, அவற்றிலிருந்து உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.



இந்த டயர்களை தீயிட்டு கொளுத்துவதால், சுற்றுப்பகுதி முழுவதும் நச்சுப்புகை பரவுவதாகவும், இதனால், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் உருவாவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



அதுமட்டுமின்றி, இந்த டயர் எரிப்புகளால், அப்பகுதி முழுவதும் காற்றுமாசு ஏற்படுவதாக சுட்டிக்காட்டும் அப்பகுதியினர், இப்பிரச்னைக்கு கோவை மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுத்து நிர்ந்தரத் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...