சினிமா தியேட்டருக்கு நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுப்பு - இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

சென்னை ரோகிணி திரையரங்கில் நடிகர் சிம்பு நடித்த பத்து தல படத்தை பார்க்க நரிக்குறவர்கள் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் உருவான பத்து தல படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்களில் இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக உரிய டிக்கெட்டுடன் வந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தியேட்டர் ஊழியர்கள் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், சிறிது நேரம் கழித்து படம் பார்க்க நரிக்குறவர்கள் இன மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தீண்டாமை அடிப்படையில் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்று டிவிட்டரில் வெளியானது.

அதை டேக் செய்த இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், கலை அனைவருக்கும் பொதுவானது. நரிக்குறவர் இன சகோதரி மற்றும் சகோதரர்கள் முதலில் படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது ஏற்றுகொள்ளமுடியாதது என தியேட்டர் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.



இதனிடையே, இந்த விவகாரம் குறித்து ரோகிணி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், பத்து தல படமானதுU/A சர்பிகேட் படம். எனவே, சட்டப்படி 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க அனுமதிக்கூடாது. தியேட்டருக்கு உரிய டிக்கெட்டுடன் வந்த நபர்கள், 2,6,8 மற்றும் 10 வயதில் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

எனவேதான் தியேட்டர் பணியாளர்கள் குழந்தைகளுடன் படம் பார்க்க முடியாது எனக்கூறி அனுமதி மறுத்தனர். பிரச்சனையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், பார்வையாளர்களுடம் கூடிய வேறுவேறு கோணங்களில் திசை திருப்பப்பட்டது.

எனவே, சட்டம் ஒழுங்கை கருத்தில்கொண்டும், இந்த பிரச்சனையை முடிவுக்குகொண்டுவரும் வகையிலும், குழந்தைகளுடனே அவர்கள் படம் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. அவர்கள் படம் பார்த்ததற்கான ஆதாரமாக வீடியோ ஒன்றையும் ரோணிகி தியேட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...