கல்குவாரியை படம் பிடிக்க சென்ற ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் - கோவை பிரஸ் கிளப் கண்டனம்!

கோவையில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரி தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காகவும், படமெடுப்பதற்காகவும் சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது குண்டர்களை விட்டு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.


கோவை: கோவையில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கல்குவாரியை படமெடுக்க சென்ற ஒளிப்பதிவாளர் மீது குண்டர்களை விட்டு தாக்கிய சம்பவத்திற்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின் வளர்ந்து வருகின்ற செய்தி ஊடகமான நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சியில் கோயமுத்தூர் மாவட்ட நிருபராக அருண்குமார், ஒளிப்பதிவாளராக பாலாஜி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கல்குவாரி தொடர்பான செய்திக்காக நிருபர் அருண்குமார், ஒளிப்பதிவாளர் பாலாஜி இவர்கள் கிணத்துக்கடவுக்கு சென்றிருக்கின்றனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள கல்குவாரியை படம்பிடித்து விட்டு திரும்பும்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட குண்டர் கும்பல், ஒளிப்பதிவாளர் பாலாஜியின் ஒளிப்பட கருவியை பறிக்க முயன்றுள்ளனர்.

மேலும், ஒளிப்பதிவாளர் பாலாஜியை தகாத வார்தைகளால் திட்டி கற்களை வீசி தாக்கியுள்ளனர். குண்டர்களின் தாக்குதலில் காயமடைந்த பாலாஜி ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் கல்குவாரியை படம் பிடித்த ஒளிப்பதிவாளர் பாலாஜி மீது குண்டர்கள் அராஜக போக்கில் நடத்திய கடும் தாக்குதலை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது. அதே சமயம் ஒளிப்பதிவாளர் பாலாஜி மீது வன்மம் கக்கிய நபர்களை உடனடியாக காவல்துறை கைது செய்ய வலியுறுத்துகின்றோம்.

ஒளிப்பதிவாளர் பாலாஜிக்கு சட்ட ரீதியிலான நடவடிக்கை மற்றும் மருத்துவ ரீதியிலான உதவிகளுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் உறுதுணையாக உடன் பயணிக்கும். பாலாஜி மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம், பாலாஜிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்துகின்றது.

ஒளிப்பதிவாளர் பாலாஜி தாக்குதல் பின்னணியில் உள்ளவர்கள் மீதான நவடிக்கைக்கு மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆவண செய்ய கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் அறிவுறுத்துகின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...