கொளுத்தும் கோடை - கோவையில் விறுவிறு விற்பனையில் குடிநீர் மண்பானைகள்!

கோவையில் கோடைவெப்பம் வாட்டி வதைத்துவரும் நிலையில், மக்கள் குளிர்ந்த தண்ணீரைக் குடித்து தாகத்தை தீர்த்துகொள்வதற்காக அதிக அளவில் மண்பானைகளை வாங்கத் தொடங்கியுள்ளதால், அதன் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வெப்பத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.



வெளியில் செல்லும்போது குடைகளை எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளனர். மேலும், உடல் சூட்டை குறைப்பதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழச்சாறுகள், கரும்புச்சாறு, இளநீர், பதநீர், கூழ் போன்றவற்றை தேடித்தேடி அருந்தத் தொடங்கியுள்ளனர். இதனால், கோவை முழுவதும் குளிர்பானக் கடைகள் காட்டுத்தீ போல பெருகிவிட்டன.



அதேநேரத்தில், குடிநீரை, குளிர்ச்சியான நீராகக் குடிக்கும் நோக்கில் தற்போது மக்களின் கவனம் மண்பானைகள் பக்கமும் திரும்பியுள்ளது. குளிர்சாதனப் பெட்டிகள் வீடுகளில் உள்ளபோதும், மண்பானை மூலம் இயற்கையான முறையில் கிடைக்கும் குளிர்ந்த நீரை பருகவே மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

இதனால், கோவையில் பூமார்க்கெட், மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மண்ணால் செய்யப்பட்ட குடிநீர்ப்பானைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பைப் பொருத்தப்பட்ட குடிநீர் மண்பானைகள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இந்த வகையான குடிநீர்ப் பானைகள் 400 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக மண் பானை வியாபாரி கூறுகையில், "வெயிலை சமாளிக்க, மண் பானை நீரை, மக்கள் அதிகம் குடித்து வருகின்றனர். மண்பானைகளால் சளி உட்பட உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மக்கள் மத்தியில் பிரபலமான களிமண் டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்களும் இங்கு விற்பனைக்கு உள்ளது. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர், என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...