கோவை சிட்கோ அருகே ரயில் மோதி முதியவர் பலி

கோவை - பொள்ளாச்சி சாலை சிட்கோ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது கேரளாவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விசாரணையில் இறந்தவர் கோவை பேரூர் செட்டிபாளையத்தை சண்முகம் (82) என்பது தெரியவந்துள்ளது.


கோவை: சிட்கோ அருகே ரயில்மோதி தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் உயிரிழந்தார்.

கோவை - பொள்ளாச்சி சாலை சிட்கோ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது கேரளாவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.



இதையடுத்து ரயிலை ஓட்டி வந்த லோகோ பைலெட் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் அடையாளம் தெரியாத முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போத்தனூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் (82) என்பதும், இவர் புதன்கிழமை காலை ஈச்சனாரி கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றதும், அப்போது சுவாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிய நிலையில், சிட்கோ அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது.

போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...