உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் இல்லாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்தனர்.
திருப்பூர்: உடுமலை அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம்உடுமலையை அடுத்து உள்ளதிருமூர்த்தி அணையிலிருந்து கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர்திட்டத்தின் மூலம் முக்கோணம் , பூலாங்கிணறு , ராகல் பாவி, கணக்கம்பாளையம் கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல ஆண்டுகளாகக் குடிநீர் வசதி பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையாக இப்பகுதியில்குடிநீர் வழங்கப்பட இல்லை என கூறப்படுகின்றது.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லாத காரணத்தால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தைமுற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
திருப்பூர் மாவட்டம்உடுமலையை அடுத்து உள்ளதிருமூர்த்தி அணையிலிருந்து கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர்திட்டத்தின் மூலம் முக்கோணம் , பூலாங்கிணறு , ராகல் பாவி, கணக்கம்பாளையம் கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல ஆண்டுகளாகக் குடிநீர் வசதி பெற்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையாக இப்பகுதியில்குடிநீர் வழங்கப்பட இல்லை என கூறப்படுகின்றது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லாத காரணத்தால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தைமுற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .