உடுமலை அருகே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்திற்கு மின் இணைப்பு துண்டிப்பு

உடுமலைப்பேட்டை பெரியவாளவாடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்திற்கு வழங்கப்பட்டுள்ள மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், விஷேச நிகழ்வுகளின் போது மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும், அமைச்சர் தலையிட்டு மின்இணைப்பு வழங்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே ஆதிதிராவிடர் மக்களின் சமுதாய நலக்கூடத்தில் துண்டிக்கப்பட்டுள்ள மின் இணைப்பை மீண்டும் வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பெரியவாளவாடி ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் ஜே.ஜேநகர், பழையூர், சின்னவாளவாடி, பெரியவாளவாடி, மூலனூர் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் இல்ல விசேஷங்களுக்காக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பெரியவாளவாடி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. மேலும் கடந்த2001-ல் சந்தை வளாகத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுப் பராமரிப்பின்றி சிதிலமடைந்து பயன்பாடின்றி உள்ளது.



தற்போது பெரியவாளவாடியை சார்ந்த ஆதிதிராவிடர் மக்கள் பெரியவாளவாடி கிராமத்தில் லயன்ஸ் அருகில் அமைந்துள்ள 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடத்தின் முகப்பில் தற்காலிக பந்தல் அமைத்து அதில் காதுகுத்து, கல்யாணம், சீர் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த கட்டிடத்திலிருந்த மின் இணைப்புகள் பழுதடைந்த அதனை பராமரிப்பு செய்யாமல் சில ஆண்டுகளாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவிஷேசங்களுக்கு மின்சார வசதிகளின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி மன்றத்தில் முறையிட்டும் பலனில்லை உள்ளூரில் உள்ள பிற மண்டபங்களில் சாதிய காரணங்களால் மண்டபம்வாடகைக்கு தர மறுத்து வருகிறார்கள்.

இந்த நவீன காலத்திலும் தனியார் மற்றும் பொது மண்டபங்களையும் பயன்படுத்த முடியாத சூழலில், தற்போதிருக்கும் சமுதாய நலக்கூடத்திற்கு மின் இணைப்பு வழங்கிட ஆவண செய்திடவேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கும் பதிவு தபாலில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...