ஆன்லைன் ரம்மி விவகாரம்: பொள்ளாச்சியில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிராகரிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொள்ளாச்சியில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரின் உருவப் படத்தை கிழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.


பொள்ளாச்சி: ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதாவை நிராகரிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொள்ளாச்சி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதாக்களை தொடர்ந்து நிராகரித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.



இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினர் பொள்ளாச்சி மத்திய தொலைபேசி நிலைய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆளுநர் ரவியின் உருவப்படத்தை கிழித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் ஆளுநர் ரவி உடனடியாக தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.



பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...