கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்..! - சிபிஐ கட்சியினர் வலியுறுத்தல்

மடத்துக்குளம் அடுத்த கணியூர் பகுதியில் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மாணவர் விடுதி மற்றும் காவல்நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது, ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, உரிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



மடத்துக்குளம் அருகேயுள்ள கணியூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கவன ஈர்ப்பு தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். கிளை செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில், தாலுகா செயலாளர் கு சவுந்திரராஜன், மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் ரணதேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

பிரசாரத்தில் கணியூர் - காரத்தொழுவு சாலையில் மாணவர் விடுதி மற்றும் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும். 24 மணி நேரமும் செயல்படுவதாக கூறப்படும் கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

போதிய இட வசதி உள்ள நிலையில் மருத்துவமனையை தரம் உயர்த்தவும், உரிய மருத்துவர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் பேருந்து போக்குவரத்து உரிய அளவில் இல்லாத நிலையில் மகளிருக்கு இலவச பயண திட்டம் பயனில்லாமல் போகிறது.

எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணியூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும். மாலை நேரங்களில் பொது இடங்கள், கோவில் பகுதிகளில் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...