ஊட்டி மலர் கண்காட்சி மே.19-ம் தேதி தொடக்கம்! - நீலகிரி ஆட்சியர் அம்ரித் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் நடப்பாண்டிற்கான கோடை விழா வரும் மே மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி மே.19-ந்தேதி தொடங்கவுள்ளதாக ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.


உதகையில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் தலைமையில் கோடை விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



அதில், மே 6-ந் தேதி முதல் கோடை விழா தொடங்கவும், முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சியை மே.6 மற்றும் 7-ந்தேதி என 2 நாட்கள் நடத்த முடிவு செய்யபட்டது.

அதனை தொடர்ந்து, மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி நடத்தவும், அதேபோல், மே 13, 14 மற்றும் 15-ந் தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.



குறிப்பாக மே 19, 20, 21, 22, 23 ஆகிய 5 தேதிகளில் பிரத்திபெற்ற 125-வது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நடைப்பெறுகிறது.

மே 27, 28 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக்கண்காட்சியை நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவ சுப்ரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...