உதகையில் மாசி கரிய பண்ட அய்யன் கோவில் திருவிழா - இருளர் இன இளைஞர்கள் உற்சாக நடனம்!

உதகை அருகே சீகூர் வனபகுதியில் உள்ள இருளர் இன பழங்குடியின மக்களின் குல தெய்வமான மாசி கரிய பண்ட அய்யன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 350 குடும்பங்களை சார்ந்த இருளர் இன மக்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, சில நாட்களாக தங்கி பல்வேறு பூஜைகளை செய்து வழிபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இருளர் என்ற ஆதிவாசி மக்கள் உதகை அருகே உள்ள ஆனைகட்டி, சிறியூர், சொக்கநள்ளி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட 10 கிராமங்களில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

வனப்பகுதிக்குள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இந்த மக்கள், தங்களது குலதெய்வமாக மாசி கரிய பண்ட அய்யனை வழிபட்டு வருகின்றனர்.

இக்கோவிலானது அடர்ந்த சீகூர் வன பகுதியில் அமைந்துள்ளது.



மிகவும் கரடு முரடான பாதை வழியாக இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வரும் இருளர் இன மக்கள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இந்தக் கோயிலுக்கான திருவிழாவை நடத்தி வருகின்றனர்.



அதன்படி, இந்த ஆண்டிற்கான கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனையடுத்து, 350 குடும்பங்களை சார்ந்த இருளர் இன மக்கள் குடும்பத்துடன் கோவில் அமைந்துள்ள சீகூர் வன பகுதிக்கு சென்று கடந்து சில நாட்களாக தங்கி பல்வேறு பூஜைகளை செய்து வந்தனர்.



ஒவ்வொரு நாளும் தங்களது கலாச்சாரப்படி பல்வேறு பூஜைகளை செய்த அந்த மக்கள், இறுதியாக அலங்கரிக்கப்பட்ட புலி வாகனங்களில் எழுந்தருளிய மாசிக் கரிய பண்ட அய்யன் மற்றும் சிறியூர் மாரியம்மனை இருளர் இன இளைஞர்கள் தங்களது தோள்களில் சுமந்தவாறு கோயில் வளாகத்தில் நீண்ட நேரம் நடனமாடினர்.



அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொறியை வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கர்நாடகா மாநில பக்தர்களும் கோவிலுக்கு நடந்துவந்து வழிபட்டுச் சென்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...