கோவை கிணத்துக்கடவு அருகே ரயில்வே மேம்பாலம் கீழ் நின்றுக் கொண்டு பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்க திட்டமிட்டு கொண்டிருந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம், முருகன், முத்துப்பாண்டி, முப்பிடாதி என 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஏட்டு பிரபு ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் அவர்கள் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகப்படும்படி 4 நபர்கள் நின்றிருந்தனர்.
அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பிடிபட்ட நான்கு பேரும் முன்னுக்குப் பின்முரனாக பேசியதால் போலீசார் நான்கு பேரையும் கிணத்துக்கடவு காவல் நிலையம் அழைத்து வந்து சோதனையிட்டனர்.
அப்போது, அவர்களிடம் கத்தி மற்றும் மிளகாய் தூள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கைதானவர்கள், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, முன்னீர் பள்ளம் தெப்பக்குளம் வீதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது24), பாளையங்கோட்டை, புது கிராமம், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த முருகன் (வயது26), பாளையங்கோட்டை, காங்கேயன்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(வயது 24) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அகரம் பகுதியைச் சேர்ந்த சந்தானராஜா(எ)முப்பிடாதி (வயது26) என்பது தெரியவந்தது.
மேலும் 4 பேரும் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் நின்று கொண்டு அந்த வழியாக வரும் நபர்களை கத்தியை காட்டி மிரட்டி மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
போலீஸ் பிடியில் சிக்கியுள்ள அருணாச்சலம் மீது நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 10-க்கு மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும், முருகன் மீது கொலை வழக்கும், சந்தான ராஜா மீது அடிதடி வழக்கும் ஏற்கனவே பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பிடிபட்ட நான்கு பேரும் முன்னுக்குப் பின்முரனாக பேசியதால் போலீசார் நான்கு பேரையும் கிணத்துக்கடவு காவல் நிலையம் அழைத்து வந்து சோதனையிட்டனர்.
அப்போது, அவர்களிடம் கத்தி மற்றும் மிளகாய் தூள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கைதானவர்கள், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, முன்னீர் பள்ளம் தெப்பக்குளம் வீதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது24), பாளையங்கோட்டை, புது கிராமம், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த முருகன் (வயது26), பாளையங்கோட்டை, காங்கேயன்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(வயது 24) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அகரம் பகுதியைச் சேர்ந்த சந்தானராஜா(எ)முப்பிடாதி (வயது26) என்பது தெரியவந்தது.
மேலும் 4 பேரும் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் நின்று கொண்டு அந்த வழியாக வரும் நபர்களை கத்தியை காட்டி மிரட்டி மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
போலீஸ் பிடியில் சிக்கியுள்ள அருணாச்சலம் மீது நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 10-க்கு மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும், முருகன் மீது கொலை வழக்கும், சந்தான ராஜா மீது அடிதடி வழக்கும் ஏற்கனவே பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.