ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்


புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், வர்தா புயலுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. தற்போது தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை என தெரிவித்தார்.

மேலும், புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 25 ஆண்டுகளுக்கு பின்பு டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் எனவும் குறிப்பிட்டதுடன் மத்திய அரசு அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அதற்காக தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருமாவளவன், தருமபுரி இளவரசன் வழக்கு சிபிசிஐடி-க்கு கொடுக்கப்பட்ட போதே இந்த முடிவை தாங்கள் எதிர்பார்த்ததாகவும், தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டிற்கு  செல்ல வேண்டும் என்பதே தங்களின் கருத்து எனவும் கூறினார்.

சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு என்பது அவை விதிகளில் இல்லை என சொல்லப்பட்டாலும், சட்டப்பேரவை தலைவர் எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கலாம் எனவும், சட்டமன்றத்தில் சபாநாயகர் சாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்ட நிகழ்வு நடைபெற்று இருந்தால் தமிழக முதலமைச்சர் அதை வெளிப்படையாக கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியதுடன், முதலமைச்சர் ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

Newsletter

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...