அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்? -தாராபுரம் தெருமுனை பிரச்சாரத்தில் சி.பி.எம் கேள்வி!

தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் இயக்கம் நடைபெற்றது. இப்பிரசாரத்திற்கு சிபிஎம் தாலூகா செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார்.

பிரச்சாரத்தின் போது நாட்டில் நிலவி வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, மக்கள் வாழ்வாதாரங்கள் மீது தொடர் தாக்குதல், பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிப்பது, அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பிரச்சார இயக்கத்தின் போது கூட்டுக்களவாணிகளின் ஊழல் சாம்ராஜ்யம் குற்றவாளிக்கூண்டில் அதானி - மோடி பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னுச்சாமி, மேகவர்ணன், கண்ணுசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...