கோவை - அன்னூர் சாலையில் சென்ற தனியார் பேருந்துக்கு முன்னால் சென்ற பைக் திடீரென வலதுபுறம் திரும்பியதால், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து, சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.
கோவை: அன்னூர் அருகே தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்னூர் - கோவை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள எல்லப்பாளையம் பிரிவில் ராஜம் என்ற தனியார் பேருந்து சென்றது. இந்த பேருந்தை ஓட்டுநர் கார்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார்.

அப்போது, எதிரே வந்த பைக் திடீரென வலதுபுறம் திரும்பியதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்னூர் - கோவை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள எல்லப்பாளையம் பிரிவில் ராஜம் என்ற தனியார் பேருந்து சென்றது. இந்த பேருந்தை ஓட்டுநர் கார்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார்.
அப்போது, எதிரே வந்த பைக் திடீரென வலதுபுறம் திரும்பியதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.