கோவையின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் செல்வபுரம், தெற்கு பேரூர் பகுதி-II, சி.எம்.சி காலனி பகுதி-II. வெரைட்டி ஹால் ரோடு ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் செல்வபுரம், தெற்கு பேரூர் பகுதி-II, சி.எம்.சி காலனி பகுதி-II. வெரைட்டிஹால் ரோடு, ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் ஜெகநாதன், உதவி நிர்வாக பொறியாளர்கள் ராஜேந்திரன், சுதர்சன் உடனிருந்தனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூர் வடக்கு பகுதி 1 பேரூர் தெற்கு பகுதி-2 எழில் நகர், வெரைட்டிஹால் ரோடு, பச்சனம்பதி, எம்.ஜி.ஆர் நகர், வால்பாறை, உக்கடம் பகுதி 4. சிக்கதாசம் பாளையம், சுந்தரம் வீதி, சி.எம்.சி.காலனி , சித்தாப்பதூர் பகுதி-2 முல்லை நகர் ஆகிய இடங்களில் 15 திட்டப்பணிகள் மூலம் 4283 குடியிருப்புகள் 389,91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் செல்வபுரம் பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அனைத்து அடிப்படை வசதிகளுடன் ரூ.46.44 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.8.80 லட்சம் செலவில் 528 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

தெற்கு பேரூர் பகுதி-II திட்டப்பகுதியில் ரூ.25.63 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.8.90 லட்சம் செலவில் 288 குடியிருப்புகளும், வெரைட்டிஹால் ரோடு திட்டப்பகுதியில் ரூ.45.05 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.10.05 லட்சம் செலவில் 448 குடியிருப்புகளும், சி.எம்.சி காலனி பகுதி-II திட்டப்பகுதியில் ரூ.49,40 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.9.50லட்சம் செலவில் 520 குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கை அறையும், ஒரு சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் பயன்பாட்டு பகுதியுடன் கட்டப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, செல்வபுரம், தெற்கு பேரூர் பகுதி-11. சி.எம்.சி காலனி வெரைட்டிஹால் ரோடு, ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும்,விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...