அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஓ.பி.எஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்றதின் தீர்ப்பை வரவேற்கும் வகையில் தாராபுரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தாராபுரம் அருகே அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக தாராபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அண்ணா சிலை அருகே பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டப்பட்டது.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக தாராபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அண்ணா சிலை அருகே பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டப்பட்டது.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.