கோவை மாவூத்தம்பதி அருகே தென்னங்கன்றுகளை சேதப்படுத்திய ஒற்றை காட்டுயானை - விவசாயி வேதனை!

கோவை மாவூத்தம்பதி அருகேயுள்ள முருகன்பதி கிராமத்தில் விவசாயி சதீஸ்குமார் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, அங்கிருந்த 11 தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்து சேதப்படுத்திய நிலையில், வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: மாவூத்தம்பதி அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மாவூத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட முருகன்பதி கிராமத்தில் சதீஸ்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலத்தில் அடிக்கடி வன விலங்குகள் வருவது வழக்கம். இதைத் தடுக்கும் வகையில், அவர் பேட்டரி பென்சிங் வேலியும் அமைத்துள்ளார்.



கடந்த சில மாதங்களுக்கு முன் சதீஸ்குமார் தோட்டத்திற்கு வந்த ஒற்றை காட்டு யானை மரத்தை முறித்து பென்சிங் கம்பிமீது போட்டு உள்ளே புகுந்து தென்னங்கன்றுகளை சேதப்படுத்திச் சென்றது. இந்நிலையில், நேற்று நள்ளிரவும் சதீஸ்குமார் தோட்டத்திற்கு வந்த ஒற்றை காட்டு யானை, பழைய பாணியிலேயே மரத்தை முறித்து பென்சிங் வேலி மீது போட்டுள்ளது.



மேலும், விவசாய தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த 11 தென்னங் கன்றுகளை பிடுங்கி எறிந்துள்ளது. இதைப் பார்த்த விவசாயி நீண்ட நேரம் சத்தமிட்டு, அந்தக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்.

இந்நிலையில், 3 ஆண்டுகளாக பாதுகாத்து வளர்த்து வந்த தென்னங்கன்றுகளை காட்டுயானை சேதப்படுத்திய நிலையில், வனத்துறை சார்பில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயி சதீஸ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...