பல்லடம் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி!

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் பாரம்பரிய உணவுகள், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கான மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில், மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட அருள்புரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டன.



இதில், பாரம்பரியமான சிறு தானிய உணவு வகைகள், திருமணமான புதுமண தம்பதிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள், குழந்தைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என விதவிதமான உணவு முறைகளை போட்டியாளர்கள் காட்சிப்படுத்தினர்.



எள் உருண்டை, சிறுதானிய பாயாசம், கடலை உருண்டை, சத்துமாவு பாயாசம், காய்கறி சூப் போன்ற பல்வேறு விதமான உணவு வகைகளை போட்டியில் காட்சிப்படுத்தப்பட்டன.

போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அடுத்ததாக வட்டார அளவிலான போட்டியிலும், அதில் வெற்றி பெறும் குழுவினர் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கு பெற அழைத்துச் செல்லப்படுவர் என மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...