தாராபுரம் அருகேயுள்ள கொங்கூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் புனரமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: தாராபுரம் அருகே கொங்கூர் காளியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொங்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கொங்கூர் காளியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த சில வருடங்களாக புனரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கோயில் பணிகள் முழுவதும் நிறைவடைந்து, இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக காலை கணபதி ஓமம் நடத்தப்பட்டு, சிவன் கோவில் மற்றும் காளியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன் பிறகு திருக்கோயில் கோபுரத்திற்கு கலச நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொங்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கொங்கூர் காளியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த சில வருடங்களாக புனரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கோயில் பணிகள் முழுவதும் நிறைவடைந்து, இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக காலை கணபதி ஓமம் நடத்தப்பட்டு, சிவன் கோவில் மற்றும் காளியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதன் பிறகு திருக்கோயில் கோபுரத்திற்கு கலச நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.