கோவை செம்மொழி பூங்காவில் கால்டுவெல்லுக்கு நினைவுச் சின்னம் - கிறித்துவ கூட்டமைப்பு மனு!

கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் பகுதியில் திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழிதான் செம்மொழி என்று அறிவித்த ராபர்ட் கால்டுவெல்லுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் அமைக்கப்படவுள்ள செம்மொழி பூங்காவில் கால்டுவெல்லுக்கு சிலை அமைக்க கோரி கிறிஸ்தவ கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் இடத்தில் திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழிதான் செம்மொழி என்று அறிவித்த ராபர்ட் கால்டுவெல்லுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவர் சகாயராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவில் அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்று சாதனை படைக்கும் வண்ணம் அனைத்து மதங்களையும் நேசிக்கும் முதல்வராக, முஸ்லிம் மதத்தினருக்கு உலமாக்கள் நலவாரியம் இருப்பது போல, இந்து கோவில்களில் பூசாரிகளுக்கு நலவாரியம் இருப்பது போல, தற்போது கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்களுக்கும் நல வாரியம் அமைத்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சருக்கும், சிறுபான்மை துறை அமைச்சருக்கும் கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் கிறிஸ்துவ திருச்சபை ஊழியர்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், கிறிஸ்தவரின் நீண்ட நாள் கோரிக்கையான கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் இடத்தில் திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழி தான் செம்மொழி என்று அறிவித்த கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல்லுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...