நீலகிரியில் 5வது நாளாக தொடரும் போராட்டம் - மரத்திற்கு மனு வழங்கிய அரசு பூங்கா பணியாளர்கள்!

பணி நிரந்தரம், கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் 5வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு பூங்கா பணியாளர்கள் மற்றும் பண்ணை பணியாளர்கள், பழமை வாய்ந்த மரத்திற்கு மனு அளித்து நூதன போராட்டம்.



நீலகிரி: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் 5வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் பணி நிரந்தரம், கால முறை ஊதியம், மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள ஊதியம் வழங்குதல். பணி மூப்பு அடிப்படையில் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும்.



சம வேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ஆம் தேதி முதல் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



5வது நாளாக போராட்டம் நீடித்துவரும் நிலையில், இதுவரை இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அறவழி போராட்டம், ஒப்பாரி வைத்து போராட்டம், கண்டன கோஷம் எழுப்பும் போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ, தோட்ட கலைத்துறை அதிகாரிகளிடம் இருந்தோ இந்த போராட்டத்திற்கு எவ்வித பதிலும் இல்லை என்று கூறி 5வது நாளாக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்தநிலையில், பூங்கா ஊழியர்கள் பூங்காவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரமான தேவதாரி மரத்திற்கு ஊர்வலமாக சென்று கண்ணீருடன் மனு அளித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...