கோவையில் ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவி கடத்தல்! - கல்லூரி மாணவர் போக்சோவில் கைது!

கோவை சூலூரில் 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரியை தனிப்படை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


கோவை: சூலூரில் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ஹரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சூலூர் போலீசார் தனிப்படை அமைத்து பள்ளி மாணவியைத் தேடி வந்தனர்.

அப்போது, கோவை பீளமேடு பேருந்து நிலையத்தில் இருவரும் நிற்பதை கண்ட தனிப்படை போலீசார், உடனடியாக அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவர் அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஹரியை கைது செய்த சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...