சூலூரில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - பொதுமக்கள் திடீர் சாலைமறியல்!

சூலூர் பகுதியில் நேற்றைய தினம் பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்த நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: சூலூர் அருகே கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக அங்குள்ள சந்தைப் பகுதியில் மழைநீர் தேங்கி தெருக்கள் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.

கனமழையால் அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்து தேங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சூலூர் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய போராட்டக்காரர்கள், ஓராண்டுக்கு மேலாகியும் இந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால், மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், வட்டாட்சியர் சுகுணா, கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆகியோர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் ரயில்வே பீட்டர் சாலை மற்றும் திருச்சி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...