கோவை இடையர்பாளையத்தில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

இடையர்பாளையம் பகுதியில் திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் விஜயகாண்டீபன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.



கோவை: கவுண்டம்பாளையம் பாஜக மண்டல அலுவலகத்தை மண்டல தலைவர் விஜயகாண்டீபன் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் இடையர்பாளையம் பகுதியில், திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் விஜயகாண்டீபன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி விஜயகாண்டீபன் வரவேற்றார்.



இதைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் மண்டல புதிய அலுவலகத்தையும் திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி மற்றும் கோவை மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து இடையர் பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பீரித்திலட்சுமி, திருநாவுக்கரசு, கோபிநாத், ரமேஷ், பொருளாளர் செந்தில்குமார், மண்டல பொதுச்செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், மண்டல பொருளாளர் சுரேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக்குமார் மற்றும் மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...