உடுமலை சுற்றுவட்டாரத்தில் கன மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் காலை முதல் விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பருவமழை மாற்றம், சீதேஷ்ண நிலை காரணமாக மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.



இந்நிலையில் இன்று காலை முதல் உடுமலை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து வந்தது. தற்போது இடைவிடாமல் கன மழை பெய்து வருவதால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது,



வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே ஓரமாக நிறுத்தி மழையில் நனையாதபடி வணிக வளாகங்களில் தஞ்சமடைந்தனர். இடைவிடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...