உடுமலை-கொழுமம் சாலை ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல் : மேம்பாலம் அமைக்க கோரிக்கை

உடுமலை அடுத்த கொழுமம் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த சாலையில், நேரத்திற்கு பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதால், மேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை பகுதியில் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கொழுமம், குமரலிங்கம் வழியாக பழனி செல்லும் வழித்தடம் முக்கிய சாலையாக உள்ளது.

குமரலிங்கம் பகுதியில் உள்ள 1000 ஆண்டுகள் கடந்த காசி விஸ்வநாதர் கோவில், பழமை வாய்ந்த தாண்டேஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் அமராவதி அணைப்பகுதிக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த வழித்தடத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

இதுதவிர ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளை பொருட்களை விற்பனை செய்வதற்காக நகரத்துக்கு கொண்டு வரவும் இந்த சாலை பயன்பட்டு வருகிறது. மேலும் பல குடியிருப்புகளுக்கு செல்லும் வழித் யில் உள்ளது. தடமாகவும் இது உள்ளது. இதனால் தினசரி ஏராளமான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.



ரயில் போக்குவரத்துக்காக இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும் சமயங்களில் ஏராளமான வாகனங்கள் சாலையில் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவசர வேலைகளுக்காக செல்பவர்கள் ரயில்வே கேட் திறக்கும் வரை தவிப்புடன் காத்திருக்கும் நிலை உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர முடியாத நிலை ஏற்படுகிறது.



இருசக்கர மற்றும் ஆட்டோ உள்ளிட்ட சிறியரக வாகனங்கள் செல்லும் வகையில் இந்த பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. ஆனால் நீண்ட நாட்களாக அந்த பாதை பராமரிக்கப்படாததால் சேறும், சகதியுமாகவும் புதர் மண்டியும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.



இதனால் ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நிற்கும் நிலை உள்ளது. இனிவரும் காலங்களில் உடுமலை வழியாக செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் போது இந்த சாலை வழியிலான போக்குவரத்து மிகவும் கடினமானதாக மாறி விடும்.எனவே கொழுமம் சாலை ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல் கட்டமாக இந்த பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...