தண்ணீர் குழாய்களில் மோட்டார் வைத்து உறிஞ்சினால் கடும் நடவடிக்கை - நகராட்சி அறிவிப்பு!

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்களில், சட்டவிரோதமாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுபவர்கள் இரண்டு நாட்களுக்குள், அகற்றவில்லை என்றால் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் அறிவிப்பு.


திருப்பூர்: உடுமலையில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர மக்களின் தாகம் தீர்க்க திருமூர்த்தி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் பெறப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, குழாய்கள் மூலம் உடுமலைக்கு கொண்டு வரப்படுகிறது.

பின்னர் இந்த தண்ணீர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு பகுதி வாரியாக 33 வார்டுகளுக்கும் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ஒருசில வீடுகளில் குடிநீர்க்குழாய் இணைப்பில் மின்மோட்டார்கள் பொருத்தி குடிநீரை உறிஞ்சுகின்றனர்.

இதனால் அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் குடிநீர் போதுமான அளவில் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் திருமூர்த்தி அணையின் நீர்இருப்பு வேகமாக குறையும் நிலை உள்ளது.

மேலும் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்யப் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சட்டத்துக்குப் புறம்பாக மின்மோட்டார் பொருத்தி இருந்தால், 2 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும். அப்புறப்படுத்த தவறினால் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது குடிநீர் எடுப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ .10 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...