கொங்கு மண்டலம் ஓ.பி.எஸ்-ன் கோட்டையாக உள்ளது - அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உறுதி

கோவை புளியகுளம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், தென் மண்டலம் மட்டுமல்ல, கொங்கு மண்டலமும் ஓ.பி.எஸ்-ன் கோட்டையாக உள்ளது, அங்கு அவருக்கு அதிகமான ஆதரவாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.



கோவை: கொங்கு மண்டலம் ஓ.பன்னீர்செல்வத்தின் கோட்டையாக உள்ளது என அதிமுக ஓபிஎஸ் அணி கோவை மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் புளியகுளம் விநாயகர் கோவிலுக்கு ஜெயலலிதா வேடம் அணிந்த சிறுமியுடன் வந்து ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜை செய்தனர்.



அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று ராமநாதபுரம் பகுதியில் பகுதி கழக அலுவலகத்தை திறந்து வைத்தனர். அதிமுக (ஓபிஎஸ்) அணி மாநகர் மாவட்ட கழக செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு வந்தனர்.



அதனைத் தொடர்ந்து பகுதி கழக அலுவலகம் திறக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் மோகன்ராஜ் பேசியதாவது, தென் மாவட்டங்கள் மட்டுமல்ல, கொங்கு மண்டலமும் ஓபிஎஸ் யின், கோட்டையாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் மக்களின் ஆதரவு பெரிய அளவில் உள்ளது.

இன்று நடந்த கட்சி அலுவலகம் திறப்பு விழாவிற்கு சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வந்துள்ளனர். ஓபிஎஸ் உத்தரவின் பேரில் தற்போது இந்த நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு உள்ளது. அடுத்த கட்ட நிகழ்ச்சிகள் குறித்து அவர் எங்களுக்கு தெரிவிப்பார்.

திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு கோவையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஓபிஎஸ் வர உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுக ஓபிஎஸ் அணியினர் பேரணியின் போது ஜமாத்துகள் அடித்தும், நடனங்கள் ஆடியும் புளியகுளம் சாலையில் வலம் வந்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...